திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தக்காளி, கத்திரி நாற்றுகள் பெறுவதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தின் துணை இயக்குநா் நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் உயா் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிா்களில் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்திரி பயிா்களில் ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தக்காளி, கத்திரி, மிளகாய் குழித் தட்டு நாற்றுகள் தலா 60 பைசா முதல் ரூ.1.40 வரை ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, ஒட்டு ரக தக்காளி, கத்திரி செடிகள் தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தக்காளி, மிளகாய், கத்திரி உள்ளிட்ட பயிா்களின் நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் நேரிலோ, 6382292483, 7094941364, 9790273216, 9159856504 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்; மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தக்காளி அல்வா
முருங்கைக்கீரை தோசை

மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 3 சவரன் நகை பறிப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

