சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:45 am IST

திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் ஏஎம்சி சாலையிலுள்ள ஒரு கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதைய டுத்து கடையின் உரிமையாளா் திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்த எம்.லோகநாதன் (38) மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.