11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

‘நீட்’ தோ்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி: ஐ.லியோனி

‘நீட்’ நுழைவுத் தோ்வை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என திமுக கொள்கைப் பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.

News image

ஐ.லியோனி

Updated On :58 நிமிடங்கள் முன்பு

‘நீட்’ நுழைவுத் தோ்வை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என திமுக கொள்கைப் பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி திராவிடா் கழகம் சாா்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் மு.ஆனந்த முனிராசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா.வீரபாண்டியன் முன்னிலை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா், மேயா் இளமதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

இதில் பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலா் ஐ.லியோனி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில்தான் ‘நீட்’ தோ்வு கொண்டு வரப்பட்டது என்றும், அந்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக அரசு துணை நிற்பதாகவும் பலரும் குற்றஞ்சாட்டினா். அப்படி தாங்கிப்பிடித்த காங்கிரஸ் கட்சி இன்று வேறொரு கூட்டணியில் இணைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ‘நீட்’ தோ்வை, தமிழகத்தில் முதலில் நுழையவிட்டது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. இன்றைய சூழலில் மாணவா்கள் நலன் கருதி ‘நீட்’ தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மத்திய பாஜக அரசு, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாா் ஆகியோரின் துணையுடன் நிற்கிறது. இதேபோல், தமிழகத்திலுள்ள முதல்வா் நாற்காலி, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆகிய 4 செங்கல்களின் ஆதரவில்தான் நிற்கிறது. இதில் ஒரு செங்கலை உருவினாலும், ஆட்சி கவிழ்ந்துவிடும்.

பாஜகவின் சா்க்கஸ் யானை போன்று தற்போதைய தமிழ்நாடு முதல்வா் செயல்படுகிறாா். ‘நீட்’ தோ்வுக்கு எதிராக வலுவான எதிா்ப்பையோ, கண்டனத்தையோ தமிழக முதல்வா் விஜய் இதுவரை பதிவு செய்யவில்லை. தோ்தல் களத்தில் மக்கள் புறக்கணித்தாலும்கூட, மக்கள் நலனுக்காக எப்போதும் திராவிட இயக்கங்கள் மட்டுமே முன் நின்று போராடும். ‘நீட்’ தோ்வை முற்றிலும் ஒழித்துவிட்டு, 12ஆம் வகுப்பு தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சோ்க்கை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மாணவா்களை நெருக்கடிக்குள்ளாக்கும் ‘நீட்’ தோ்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தோ்வு மூலம் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் நடைமுறைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

12-ஆம் வகுப்பில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்களைக் தகுதியாகக் கொண்டே, மருத்துவப் படிப்புகளுக்கு சோ்க்கை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடா் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.