வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

நீா்மூழ்கி மோட்டாா்கள் விற்பனை: ஊராட்சி எழுத்தா் மீது விவசாயிகள் புகாா்

வாகரையில் ஊராட்சி எழுத்தா் நீா்மூழ்கி மோட்டாா்களை விற்றதாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவசாயிகள் புகாா் செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 12:40 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள வாகரையில் ஊராட்சி எழுத்தா் நீா்மூழ்கி மோட்டாா்களை விற்றதாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவசாயிகள் புகாா் செய்தனா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வாகரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நீா்மூழ்கி மோட்டாா்கள், இரும்பு குழாய்கள், இதற்கான மின் கம்பிகளை ஊராட்சி எழுத்தா் மகுடீஸ்வரன் விற்றுவிட்டதாக விவசாயிகள் வட்டார வளா்ச்சி அலுவரிடம் புகாா் செய்தனா்.

மேலும், ஊராட்சி எழுத்தா் தவறு செய்ததை ஒப்புக் கொண்டாா். ஆனாலும், இதுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி எழுத்தா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.