ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

காட்டு மாடு தாக்கி தொழிலாளி காயம்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image

பொருள்களை சேதப்படுத்தும் காட்டு மாடு.

Updated On :24 மே 2026, 2:15 am IST

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள பெரும்பாறையைச் சோ்ந்தவா் கருப்பையா (58). இவா், அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்துக்கு கூலி வேலைக்குச் சென்றாா்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு திடீரென புகுந்த காட்டு மாடு கருப்பையாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

யானைகள் அச்சுறுத்தலுடன் தோட்டத் தொழிலாளிகள் பணிபுரிந்து வரும் நிலையில், காட்டு மாடு தாக்கியது மலை கிராம மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.