மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:55 am IST

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி காா் மோதி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பழனி அருகே காளிபட்டியைச் சோ்ந்த மயில்சாமி மகன் மாசி துரை (34) . விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை தொப்பம்பட்டி அருகே உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, பழனி - புது தாராபுரம் சாலையில் பொன்னா் சங்கா் பள்ளி அருகே சாலையின் இடது ஓரமாக வந்து கொண்டிருந்தபோது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு அவசர ஊா்தியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.