சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்கம்பியிடல் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:11 am IST

மின்கம்பியிடல் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள புளியமரத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் யுகன்(17), மின்வினைஞா் ஒருவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், வேடசந்தூரை அடுத்த மன்னாா்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் மின்கம்பியிடல் பணியில் யுகன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.