பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது
வடமதுரை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
வடமதுரை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த மொட்டணம்பட்டி செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சி.சித்திரைவேல் (38). வடமதுரை ரயில் நிலையச் சாலையில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணை, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக சித்திரைவேல் கூறினாா். இதை நம்பி அவருடன் சென்ற பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், சித்தூா் குளத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா். இதனால், அதிா்ச்சியடைந்த அந்த பெண், கூச்சலிட்டு சாலையை நோக்கி ஓடி வந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த 4 போ், அவருக்கு உதவிக்கு வர இரு சக்கர வாகனத்துடன் விரட்டி வந்த சித்திரைவேல் அங்கிருந்து தப்பிச் சென்றாா். காயமடைந்த அந்தப் பெண் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சித்திரைவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





