‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

வலிப்பு நோயாளிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் குணமடையலாம்

வலிப்பு நோயாளிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், அந்த நோயிலிருந்து விடுபடலாம் என, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

Updated On :29 ஏப்ரல் 2013, 12:25 am IST

வலிப்பு நோயாளிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், அந்த நோயிலிருந்து விடுபடலாம் என, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

  வலிப்பு நோய் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில், பொதுநல மருத்துவர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

  இக்கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் பேசியது:

வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். 3 ஆண்டுகளுக்கு நோயாளிகள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், வலிப்பு நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடையலாம்.

தூக்கம் கெடுதல், சரியான நேரத்தில் சாப்பிடாமை, நீண்டநேரம் தொலைக்காட்சி, கணினி பார்ப்பது வலிப்பு நோயினை ஊக்குவிக்கும்.

  இந்தியச் சட்டப்படி வலிப்பு நோயுள்ள மனைவியை, கணவர் விவாகரத்து செய்யமுடியாது. இதில், பிரச்னை ஏற்படும்பட்சத்தில் வழக்குரைஞர் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் பேசுவதே சிறந்தது.

  ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்தால் வெளியே தெரியாது.

 ஆனால், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டால், பொது இடங்களிலும் வலிப்பு நோய் வந்து மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். இதனால், நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.

  இது தொடர்பாக நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தொடர்ச்சியான மருந்து, மாத்திரையே வலிப்பு நோயை முற்றிலும் குணமாக்கும் என்றார்.

  இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நரம்பியல் மருத்துவர் கணேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.