வலிப்பு நோயாளிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தால், அந்த நோயிலிருந்து விடுபடலாம் என, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.
வலிப்பு நோய் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில், பொதுநல மருத்துவர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், நரம்பியல் மருத்துவர் விஜய் ஆனந்த் பேசியது:
வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவேண்டும். 3 ஆண்டுகளுக்கு நோயாளிகள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், வலிப்பு நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமடையலாம்.
தூக்கம் கெடுதல், சரியான நேரத்தில் சாப்பிடாமை, நீண்டநேரம் தொலைக்காட்சி, கணினி பார்ப்பது வலிப்பு நோயினை ஊக்குவிக்கும்.
இந்தியச் சட்டப்படி வலிப்பு நோயுள்ள மனைவியை, கணவர் விவாகரத்து செய்யமுடியாது. இதில், பிரச்னை ஏற்படும்பட்சத்தில் வழக்குரைஞர் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் பேசுவதே சிறந்தது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்தால் வெளியே தெரியாது.
ஆனால், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டால், பொது இடங்களிலும் வலிப்பு நோய் வந்து மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். இதனால், நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.
இது தொடர்பாக நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தொடர்ச்சியான மருந்து, மாத்திரையே வலிப்பு நோயை முற்றிலும் குணமாக்கும் என்றார்.
இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நரம்பியல் மருத்துவர் கணேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கு அழைப்பு! கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!!

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்

‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
