மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போலி போலீஸ் கைது

போக்குவரத்து போலீஸ்காரர் எனக்கூறி பொதுமக்களை மிரட்டி வசூல் செய்த  இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:09 pm

தினமணி

போக்குவரத்து போலீஸ்காரர் எனக்கூறி பொதுமக்களை மிரட்டி வசூல் செய்த  இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

 நீலகிரி மாவட்டம், சோழமடம் பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன்  சுரேஷ்பாபு (23). இவர் திண்டுக்கல்லில் போக்குவரத்து போலீஸ் போன்று உடை மற்றும் பேட்ஜ் அணிந்து உலா வந்தாராம்.

 போக்குவரத்து வார்டன் என்று மற்றவர்களிடம் தன்னைப் பற்றி கூறி வந்துள்ளார்.

 இந்நிலையில், உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் வகுரணியைச் சேர்ந்த ராமலிங்கம்  என்பவரிடம் இவர் ரூ. 500 கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

 இது தொடர்பாக ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சுரேஷ்பாபுவை சனிக்கிழமை கைது செய்தனர்.

 அரசு சீருடை மற்றும் முத்திரையை தவறாகப் பயன்படுத்தியது, கொலை மிரட்டல்  விடுத்தது ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 இவர் திண்டுக்கல் பகுதியில் பல்வேறு நபர்களிடம் மிரட்டி பணம் வசூலித்துள்ளதாகக்  கூறப்படுகிறது. அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.