‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பிளஸ் 2, 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள்

மதுரையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுத் தாள்கள் திருத்தும் மையங்கள் மற்றும் அதற்கான பொறுப்பு அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மதுரையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுத் தாள்கள் திருத்தும் மையங்கள் மற்றும் அதற்கான பொறுப்பு அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

   தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,683 பேர் எழுதுகின்றனர். அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.

   பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், மதுரை கல்வி மாவட்டத்தில் திருநகர் சீதாலட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், மேலூர் கல்வி மாவட்டத்துக்கு யானைமலை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்கு கருமாத்தூர் புனித கிளாரெட் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றன.

  பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களாக, மதுரை கல்வி மாவட்டத்துக்கு ஞானஒளிவுபுரம் செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியும், மேலூர் கல்வி மாவட்டத்துக்கு திருப்பாலை வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்கு திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, கல்வி மாவட்ட அலுவலர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.