பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மசாஜ் நிலைய உரிமையாளரை  அரிவாளால் வெட்டி பணம், செல்லிடப்பேசிகள் பறிப்பு

மதுரையில் மசாஜ் நிலைய உரிமையாளரை அரிவாளால் வெட்டி பணம், செல்லிடப்பேசிகள் மற்றும் ஏடிஎம் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:51 am

DIN

மதுரையில் மசாஜ் நிலைய உரிமையாளரை அரிவாளால் வெட்டி பணம், செல்லிடப்பேசிகள் மற்றும் ஏடிஎம் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     திருப்பூர் மாவட்டம், ரெங்கபாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் லிஜின் (22). மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் எதிரில் மசாஜ் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், மசாஜ் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த மர்ம நபர்கள் 4 பேர்,  லிஜினிடம் பணம் கேட்டுள்ளனர்.
அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த 4 பேரும்  அவரை அரிவாளால் வெட்டி, மசாஜ் நிலையத்திலிருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்லிடப்பேசிகள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம், வங்கி ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
     இதில் பலத்த காயமடைந்த லிஜின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக லிஜின் அளித்த புகாரின்பேரில், கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.