தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கார் மோதி புகைப்பட கலைஞர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற புகைப்பட கலைஞர் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:40 am

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற புகைப்பட கலைஞர் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வாவிட மருதூரைச் சேர்ந்தவர் பெரியபுலியான் (43). புகைப்பட கலைஞர். இவர் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்து விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மதுரை -திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் தனிச்சியம் பிரிவில் இறங்கி சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரைக்குச் சென்ற கார் பெரியபுலியான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியபுலியான் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் தொடர்பாக பெரியபுலியான் மனைவி சரஸ்வதி அளித்தப் புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸார், கார் ஓட்டுநர் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சங்கரராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.