காவிரி பிரச்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசினார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை டி.எம். கோர்ட் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியதாவது: ஆண்கள் மட்டுமே சாதிக்கக் கூடிய அரசியலில் தனி ஒரு பெண்ணாக சாதித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் அவரை இழிவாகப் பேசியும், அவர் பயணம் செய்த வாகனத்தின் மீது லாரியை விட்டு மோதி கொலை செய்யவும் முயற்சித்தனர். அதையெல்லாம் துணிவோடு சந்தித்தவர் ஜெயலலிதா.
காவிரி பிரச்னையில் ஜெயலலிதாவுக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்தன. அப்போதும் கூட தனி நபராக நின்று பல சாதனைகளை புரிந்தார். பெண்களின் குறைகளை போக்க தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கி, பாகிஸ்தான் நாடே பாராட்டும்படி செயல்பட்டார். அமைதிப் பூங்காவாக இருந்து வரும் தமிழகத்தில் ஏதாவது கலகத்தை ஏற்படுத்த திமுக சதி செய்கிறது என்றார்.
இக் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

