இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய20 மின் மோட்டார்கள் பறிமுதல்

உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:09 am IST

உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
 உசிலம்பட்டி நகராட்சியில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அப்போது சட்ட விரோதமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதால் மற்ற பகுதிக்கு குடிநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற புகார்கள் நகராட்சி ஆணையருக்கு வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் சுப்பையா உத்தரவின்
பேரில், பொதுப்பணி மேற்பார்வையாளர் கணேசன், பிட்டர் கதிரேசன் உள்ளிட்டோர் நகர் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது கருக்கட்டான்பட்டி காலனி, மலையாண்டி தியேட்டர் பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.