மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்க ஆணையர் அனீஷ்சேகர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (மேற்கு) அலுவலகத்தில் ஆணையர் அனீஷ்சேகர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வரிவசூல் மையம், பொதுப் பிரிவுகளில் பணியாளர்கள் வருகை பதிவு ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், பணியாளர்களின் தன்பதிவேடு, இயக்கப் பதிவேடு, விடுப்புகள் விவரம், அனுமதி விடுப்பு விவரங்கள் அடங்கிய பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியாளர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு வெளியில் செல்லும் போது அதை இயக்கப் பதிவேட்டில் முறையாக எழுதி பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மண்டல அலுவலக பதிவேடு பராமரிப்பு அறைக்குச் சென்ற ஆணையர், அங்கிருந்த ஆவணப்பதிவேடுகளை எடுத்து பார்த்து அலுவலர்களிடம் விவரம்
கேட்டார். பணிமுடிந்த கோப்புகளையும், தணிக்கைக்கு உள்பட்ட கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
ஆவணக்காப்பறையில் தேவையின்றி குவிந்திருந்த உடைந்த தளவாடச் சாமான்களை அப்புறப்படுத்த உத்தரவிட்ட ஆணையர், விண்ணப்பித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கோப்புகளையும் ஆய்வு செய்து விவரங்களைக் கேட்டறிந்தார்.
பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கான மனுக்கள், கோப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் ஆணையர் உத்தரவிட்டார்.
மண்டல அலுவலக ஆய்வுக்குப்பின்னர் எல்லீஸ்நகர் பகுதியில் பூங்கா அமைக்கும் பணியையும், எஸ்.பி.ஓ. காலனியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
ஆணையருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் என்.சித்திரவேல், உதவி
செயற்பொறியாளர் முருகேசபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


