பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மதுரையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.
கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியைப் பட்டப் படிப்பாக உயர்த்துவது, இணைய வசதியுடன் கூடிய கணினி வழங்குவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் அளிப்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், நவம்பர் 28 முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 10 ஆம் தேதி முதல்  மதுரை மாவட்டத்தில் இச் சங்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர்  காலவரையற்ற  வேலை
நிறுத்தப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோரிக்கை விளக்கப் பேரணி நடைபெற்றது.
ராஜா முத்தையா மன்றம் அருகே தொடங்கிய இப் பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. பின்னர் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க மாவட்டத் தலைவர் ஜெயபாஸ்கர் தலைமை 
வகித்தார். மாவட்டச் செயலர் சொ.ராஜாமணி, துணைத் தலைவர் அக்னிராஜா, துணைச் செயலர் தங்கபாண்டி, பிரசார செயலர் பிரபாகரதாஸ், அமைப்புச் செயலர் சீதா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 
கூட்டுப் போராட்டம், டிசம்பர் 24-இல் சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து மனு அளிப்பது,  டிசம்பர் 26-இல் மக்களவை உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்,  டிசம்பர் 27 
இல் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.