கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தேசிய விளையாட்டுப் போட்டியில் 3 ஆம் இடம்: மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 3 ஆம் இடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர்களை ஆட்சியர் ச.நடராஜன் பாராட்டினார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 3 ஆம் இடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர்களை ஆட்சியர் ச.நடராஜன் பாராட்டினார்.
 வரும் 2021-இல் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பஞ்சாப் மாநிலத்தில் நவ. 19 முதல் 24 ஆம் தேதி வரை புளோர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. 
இப்போட்டியில் தமிழக அணி 3-ஆம் இடத்தைப் பிடித்தது. மதுரை பெத்சான் பள்ளியைச் சேர்ந்த ஹரிகரசுதன், சூர்யா, முகேஷ்சுந்தர், கமலேஷ் ஆகியோர் தமிழக அணியில் இடம் பெற்றிருந்தனர்.
 இதேபோல், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற புளோர்பால் போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணி 3-ஆம் இடம் பெற்றது. இந்த அணியில் மதுரை அன்பகம் சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த கே.பவித்ராதேவி, கே.கீதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் திங்கள்கிழமை பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.