தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி - ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:19 am IST

உசிலம்பட்டியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து பேருந்து நிலையம் நுழைவு வாயில் வரை கைகோர்த்து நின்றனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கோட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலர் பிரசன்னா ஆகியோர் தலைமை வகித்தனர். வட்ட தலைவர் ரம்யா, வட்ட செயலர் சசிக்குமார், வட்ட பொருளாளர் முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி ஆகிய 4 தாலுகாக்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பத்மநாதன்  நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.