காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கைத்தொழில்கள் பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியக செயலர் மா.பா.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வரும் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கிராமக் கைத்தொழில் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது பாத்திரம் துலக்கும் சோப்புகள், துணியை துவைக்கப் பயன்படும் பவுடர், குளியல் சோப்புகள், ஓம வாட்டர் ஆகியவை தயாரிப்பதற்கான பயிற்சிகள் செயல்முறையுடன் அளிக்கப்படவுள்ளன. பயிற்சி முடிந்ததும் சான்றுகளும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜனை நேரிலோ அல்லது 98657-91420 என்ற செல்லிடப் பேசியிலோ தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

