மதுரையில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மூன்றாவது மாநிலப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பேரவைத் தலைவர் ப. நீதிமணி தலைமை வகித்தார். பொதுச்செயலர் எல். சீனிவாசன் செயல் அறிக்கையும், பொருளாளர் கோ. முருகன் நிதி நிலை அறிக்கையையும் வாசித்தனர்.
இதில், தமிழ்நாடு அரசுஅலுவலர் கழகம் (சி அண்ட் டி) மாநிலத் தலைவர் பி. செளந்திரராஜன் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகளை எம்.வி. பால்ராஜ் அறிமுகப்படுத்திப் பேசினார்.
கூட்டத்தில், கல்வித் துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கு துணை, இணை இயக்குநர் பதவியை அரசாணைப்படி வழங்கவேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பணிகளில் உதவிட நிதிக் காப்பாளர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடத்தை ஏற்படுத்தவேண்டும். கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏனைய துறைகளில் உள்ளதுபோல தர ஊதியம் வழங்கவேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் என்ற பதவிப் பெயரை நேர்முக அலுவலர் என மாற்றிடவும், நிதி அதிகாரத்துடன் அப்பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் சாமி சத்தியமூர்த்தி, மதுரை பாஷா, சோணை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








