மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மதுரையில் நாளை தனிமனை வரன்முறை சிறப்பு முகாம்: ஆணையர் அனீஷ்சேகர்

மதுரையில் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் ஜூலை 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமதியற்ற மனைப் பிரிவுகளின்

Updated On :23 ஜூலை 2018, 5:58 am IST

மதுரையில் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் ஜூலை 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் தனிமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
இது குறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 100 வார்டுகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவினை வரன்முறைப்படுத்தும் வகையில், சிறப்பு முகாம் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று சம்பந்தப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்தும் தொகையை செலுத்துவதற்கான உத்தரவுகளையும், வரன்முறைப்படுத்தியதற்கான உத்தரவுகளையும் பெறலாம்.
முகாமுக்கு வரும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பத்திர நகல்கள், இணையதள கட்டணம் ரூ.500, வில்லங்கச் சான்று ஆகிய அனைத்தும் அடங்கிய கோப்புகள் இரண்டும், மேலும் சம்பந்தப்பட்ட மனைப் பிரிவுக்கான வரைபட நகல்கள் (லே-அவுட்)  ஐந்தும் கொண்டுவரவேண்டும். சரியான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
முகாமில் சம்பந்தப்பட்ட மனைக்கான தொகையை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது மனைக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 என கட்டணம் செலுத்தவேண்டும். முகாம் அன்றே கட்டணம் செலுத்துவோருக்கு வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கப்படும்.
வருங்காலங்களில் வரன்முறைப்படுத்தாத மனைகளுக்கு மாநகராட்சியால் கட்டட வரைபட அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே, இந்த முகாமைப் பயன்படுத்தி, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் உரிமையாளர்கள் தனிமனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.