சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் சேதம்: திருமங்கலம் கோயில் செயல் அலுவலர் போலீஸில் புகார்

திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் செயல் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.

Updated On :23 ஜூலை 2018, 5:57 am IST

திருமங்கலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயில் செயல் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
திருமங்கலம் காட்டு பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம்  விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள 1.10 ஏக்கர் இடத்தில் கடலை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை சிலர் ஞாயிற்றுக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம். இதையடுத்து செயல் அலுவலர் சக்கரையம்மாள் திருமங்கலம் நகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.  
 இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:  கோயிலுக்கு சொந்தமான  இடத்தை தனியார் அமைப்பு ஒன்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இந்த இடம் கோயில் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் சுற்றுச்சுவரை தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.