மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 33 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் முன், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென கூடி, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுதொடர்பாக மெட்ரிக்பள்ளி ஆய்வாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், அதனால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனால், அங்கிருந்த தல்லாகுளம் போலீஸார் கல்வி அலுவலகத்தின் பிரதான இரும்புக் கேட்டை மூடினர். இருப்பினும், கல்வி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற மாணவர் சங்கத்தினர் 33 பேரை போலீஸார் கைது
செய்து, குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். அவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.