ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

உதவித்தொகை உயர்வு கோரிக்கை ஏற்பு: பயிற்சி, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள்

Updated On :26 ஜூன் 2018, 7:40 am IST

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
 தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும், 2,500-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களைத்தான்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு பயன்படுத்தி வருகிறது.  பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.14 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு ரூ.26 ஆயிரமும் வழங்கப்படுகிறது.  ஆனால் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.26 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு மாதம் ரூ.96 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 
 தமிழகத்தை தவிர இதர மாநிலங்கள் அனைத்திலும் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.