கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் புதன்கிழமை இரவு லாரி மீது கார் மோதியதில் காரை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். பெண் காயமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூவர்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (60). இவரது மனைவி ரங்கம்மாள் (55). இருவரும் மதுரைக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை ஊருக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பள்ளபட்டி அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சேதுராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த ரங்கம்மாள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.