மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில் வளாகக் கடைகளை அகற்ற தடை கோரி வழக்கு: இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்வது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 4:16 am

DIN

கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்வது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து தமிழகத்தில் முக்கியக் கோடில்களில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி கடை உரிமையாளர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
 இந்த நோட்டீûஸ ரத்து செய்யக்கோரி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட கோயில் வளாகங்களில் கடைகள் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, கோயில் வளாகத்தில் கடைகள் நடத்துவோருக்கு மாற்றுஇடம் ஒதுக்கித் தர வேண்டும். இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 16 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கடைகளை காலி செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.