தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தடகளப் போட்டியில் வெற்றி: தலைமைக் காவலருக்கு பாராட்டு

தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற தலைமைக் காவலரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் புதன்கிழமை பாராட்டினார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 4:17 am

தினமணி

தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற தலைமைக் காவலரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் புதன்கிழமை பாராட்டினார்.
 இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 அகில இந்திய மூத்தோர் தடகள கூட்டமைப்பு சார்பில் 39-ஆவது தேசிய மூத்தோர் தடகளப்போட்டிகள், –கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மதுரை மாநகரக் காவல்துறை கோ.புதூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சிதம்பரம் (40) தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார். இதில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டி மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற தலைமைக்காவலர் சிதம்பரத்தை, மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.