திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில் சுற்றுப்புறத்தைக் காக்கும் வகையிலும் ஒலி மாசில்லாத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக திருத்தொண்டர் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதியும், அவர்கள் கோயிலில் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும் ஒலி, மாசில்லா திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, நீர்வழி மேலாண்மை, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனங்களின் ஒலி அளவைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி ஒலி, மாசில்லாத் திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இத்திட்டம் அறநிலையத்துறை, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்போடு விரைவில் செயல்படுத்தப்படும் என திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.