மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை பாட்டியும், அவரது பேரனும் குவாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து மனைவி போதுமணி(48). இவர்களுடைய மகள் சுதா. திருமணமாகி வெளியூரில் வசித்துவரும் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், தனது மகன் பெரியசாமியுடன் (2) சின்ன உலகாணி வந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, போதுமணி தனது பேரன் பெரியசாமியுடன் அப்பகுதியில் இருந்த கல்குவாரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் துணி துவைக்கச் சென்றாராம். அப்போது பேரன் பெரியசாமி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போதுமணியும் தண்ணீரில் மூழ்கினார்.
இதில் இருவரும் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கூடக்கோயில் போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

