மதுரையை அடுத்த சோளங்குருணி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து 36 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.
இந்த முகாமில் ஆட்சியர் பேசியது: அம்மா திட்ட முகாம் மூலமாக இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 427 மனுக்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த 1 லட்சத்து 10 ஆயிரத்து 401 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.176 கோடி செலவில் 49 ஆயிரத்து 154 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 202 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து 36 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

