மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை பாட்டியும், அவரது பேரனும் குவாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து மனைவி போதுமணி(48). இவர்களுடைய மகள் சுதா. திருமணமாகி வெளியூரில் வசித்துவரும் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், தனது மகன் பெரியசாமியுடன் (2) சின்ன உலகாணி வந்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, போதுமணி தனது பேரன் பெரியசாமியுடன் அப்பகுதியில் இருந்த கல்குவாரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் துணி துவைக்கச் சென்றாராம். அப்போது பேரன் பெரியசாமி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய போதுமணியும் தண்ணீரில் மூழ்கினார்.
இதில் இருவரும் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கூடக்கோயில் போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

