வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கார் மோதி கட்டடத் தொழிலாளி சாவு: இளைஞர் கைது

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Updated On :14 மே 2018, 12:09 am

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருப்பாலை பொறியாளர் நகர் 8-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராஜபெருமாள் (39), கட்டடத் தொழிலாளி. இவர், சனிக்கிழமை இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜபெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக ராஜபெருமாள் மனைவி ஜெயத்திரு (35) அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மது போதையில் கார் ஓட்டிய ஊமச்சிகுளம்- கொடிமங்கலம் விலக்கைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.