மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மதுரை விமான நிலையத்தில்துபையில் இருந்து கடத்தி வரப்பட்டரூ.23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் துபையில் இருந்து பெண் பயணி கடத்தி வந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :21 மே 2018, 11:10 pm

மதுரை விமான நிலையத்தில் துபையில் இருந்து பெண் பயணி கடத்தி வந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை விமான நிலையத்துக்கு துபையில் இருந்து பயணிகள் விமானம் திங்கள்கிழமை மாலை வந்தது. அந்த விமானத்தில் வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டனர்.
அப்போது, திருச்சியைச் சேர்ந்த அலிமா (38), தனது உள்ளாடையில், தங்கத்தை ரப்பருடன் கலந்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1 கிலோ 400 கிராம் எடையுள்ள ரப்பர் கலவையில் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் உள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, அலிமாவிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.