மதுரை மாவட்ட கலை பண்பாட்டுதுறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிற்பக்கலை கண்காட்சி நிறைவு விழாவில் ஓவியக் கலைஞர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
மதுரை கலைபண்பாட்டுத்துறை சார்பில் சிற்பக்கலை கண்காட்சி மற்றும் ஓவியக் கலைஞர்களுக்கான ஓவியக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்துப் பேசியது: கலை மற்றும் பண்பாட்டின் காலக்கண்ணாடியாக ஓவியம், சிற்பம் திகழ்கிறது.
ஓவியம், சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை விருதுகள் அரசால் வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஆண்டு தோறும் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுவருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கான மதுரை மாவட்ட சிறந்த ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் ஆட்சியரால் வழங்கப்பட்டன. விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன், அரசு இசைக் கல்லூர் முதல்வர் சி.டேவிட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: க.கிருஷ்ணசாமி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
