திருப்பரங்குன்றம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டி சத்திரபட்டியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் வேனில் அழகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தார். சம்பக்குளம் விலக்கு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனில் வந்த சுப்புத்தாய்(65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த தவமணி (75),கோபாலகிருஷ்ணன்(30), பாலாஜி(12), ஸ்ரீதரன்(10) உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
இதில் லேசான காயமடைந்த 13 பேர் திருமங்கலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மேனகா, கோபால், நடராஜன் ஆகிய மூவரும் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK

திருமணம் செய்து கொள்ள வேண்டாம்! மரணமடைந்த நொய்டா பெண் கடைசி மெசேஜ்

10 வகுப்பு முடிவுகள்! முதல்வர் விஜய் ஆலோசனை!

சிறுவனைக் கொன்று குழிதோண்டிப் புதைத்த 2 பள்ளி மாணவர்கள் கைது!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
