மதுரையில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் வடம் பிடித்த கல்லூரி மாணவர் வடக்கயிறு இறுக்கியதில் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத்திருவிழா வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை கல்லூரி மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்து வந்தனர். இதில் பெருங்குடியில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த அனுப்பானடியைச் சேர்ந்த கோபால் மகன் பிரவீண்குமாரும்(20) தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்து வந்தார். இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக பிரவீண்குமார் தவறி விழுந்ததில் வடக்கயிறு இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி நினைவிழந்த பிரவீண்குமாரை நண்பர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம்தொடர்பாக கோபால் அளித்தப் புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!

த்ரிஷ்யம் 3 படத்தின் டிரைலர் அப்டேட்!

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்

நாட்டில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின் வசதி, கழிப்பறைகள் இல்லை! நீதி ஆயோக்
வீடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

