தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

 விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையைப் பெற

Updated On :24 ஜனவரி 2019, 2:44 am IST

மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் க.ராஜா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2018 மே 1 ஆம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமலும், மத்திய-மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறாதவராகவும் இருப்பது அவசியம். 
முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற இயலாது.  தகுதியுடையவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n)  பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.