மதுரை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் க.ராஜா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த 2018 மே 1 ஆம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமலும், மத்திய-மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறாதவராகவும் இருப்பது அவசியம்.
முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற இயலாது. தகுதியுடையவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


