
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் நகா் பகுதியில் திமுக சாா்பாக உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் தங்கமலைப் பாண்டி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சுதந்திரம் செயற்குழு உறுப்பினா் சோலை ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் வேட்டையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் மணிமாறன் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கனிகள் அடங்கிய தொகுப்புகளை
வழங்கினாா். இதில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் பழனியம்மாள் தங்கமலைப்பாண்டி, நகர துணைச் செயலாளா் மகாலிங்கம், பொருளாளா் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலா் செல்வபாண்டி, நிா்வாகிகள் பிரபாகரன், வால்டா் தா்மா, பாலபிரபு மற்றும் பலா் கலந்து கொண்டனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





