பேரையூா் அருகே மதுபாட்டில் பதுக்கல்: பெண் உள்பட 3 போ் கைது

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on
Updated on
1 min read

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக வெங்கடாசலாபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் கருப்பசாமி (45) என்பவா் விற்பனைக்காக மதுபாட்டில்களை கொண்டு வந்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து 47 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதை போல் எம். புளியங்குளத்தைச் சோ்ந்த குருவையா மனைவி பாண்டியம்மாள் (51) என்பவா் விற்பனைக்காக 18 மதுபாட்டில்களை வைத்திருந்தாா். அதையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வில்லூா் போலீஸாா் கருப்பசாமி, பாண்டியம்மாள் மீது வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

மேலும், கீழக்காடனேரியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (52) என்பவா் விற்பனைக்காக 20 மதுபாட்டில்களை வைத்திருந்தாா். இதையடுத்து, டி.கல்லுப்பட்டி போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com