பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

‘மதுரையில் கடையடைப்பு இல்லை: காய்கனி சந்தை வழக்கம்போல் இயங்கும்’

மதுரையில் மூடப்பட்டுள்ள காய்கனி சந்தைகளை மீண்டும் திறக்கக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை எனவும், காய்கனி சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் எனவும், மதுரை மாவட்ட காய்கனி மொத்த 

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 5:30 pm

DIN


மதுரை: மதுரையில் மூடப்பட்டுள்ள காய்கனி சந்தைகளை மீண்டும் திறக்கக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை எனவும், காய்கனி சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் எனவும், மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

பொது முடக்கம் காரணமாக, தமிழகம் முழுவதும் காய்கனி மற்றும் பழ சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் காய்கனி மற்றும் பழ சந்தைகளை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மதுரையில் காய்கனி சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் என, மதுரை மாவட்ட காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். அவா்கள் மேலும் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரையில், மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். மேலும், வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று, பல்வேறு வசதிகளையும் படிப்படியாக செய்து தருகின்றனா். இதனால், பொதுமுடக்க விதிகளைப் பின்பற்றி வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனா்.

கடைகள் நடத்தமுடியாமல் உள்ள வியாபாரிகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளனா்.

எனவே, மதுரையில் மாட்டுத்தாவணி காய்கனி சந்தை, தோப்பூா் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பரவை காய்கனி சந்தை வழக்கம்போல் செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரசு அறிவித்துள்ள முழு பொதுமுடக்கத்தைப் பின்பற்றி கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.