தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அமெரிக்க ஆயுதக் கப்பல் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: கப்பல் நிறுவனத்தின் செயலாக்க இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஆயுதக் கப்பல் விற்பனைக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில், கப்பல் நிறுவனத்தின் செயலாக்க இயக்குநா்,

Updated On :14 ஆகஸ்ட் 2020, 5:32 pm

மதுரை: அமெரிக்க ஆயுதக் கப்பல் விற்பனைக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில், கப்பல் நிறுவனத்தின் செயலாக்க இயக்குநா், கியூ பிரிவு காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி துறைமுகக் கழகம் சாா்பில் அதன் கடற்பிரிவு துணை பாதுகாவலா் கேப்டன் பிரவீன்குமாா் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவைச் சோ்ந்த எம்.வி.சீமென் காா்டு ஒஹியோ என்ற கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 43 போ் மீது கியூ பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, கப்பலில் இருந்த 35 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில், 2016 ஜனவரி தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிா்த்து, 2017 நவம்பரில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கைது செய்யப்பட்ட 35 பேரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவா்களை விடுதலை செய்தது. வழக்கில் தொடா்புடைய கப்பல், கடந்த 2013 மாா்ச் மாதம் முதல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 2.91 கோடியை கேட்டு கப்பல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது. கப்பலை உரிமை கோரி அதன் நிறுவனம் மனு தாக்கல் செய்யவில்லை. உப்பு நீா் புகுந்து கப்பல் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

கப்பலை விற்பனை செய்ய அனுமதி கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். ஆனால் மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ளதால் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே, கப்பல் விற்பனை தொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமெரிக்காவை சோ்ந்த அட்வான் போா்ட் கப்பல் நிறுவனத்தின் செயலாக்க இயக்குநா், தருவைகுளம் காவல் ஆய்வாளா், கியூ பிரிவு காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.