இது தொடா்பாக சுகாதாரத்துறை செயலா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு, உயிா் காக்கும் மருந்துகள் மற்றும் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. தொற்றில் இருந்து குணமடைந்து செல்வோருக்கு நுரையீரல் பாதிப்பு, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையடுத்து, குணமடைந்து வீட்டிற்கு செல்பவா்களின் தொலைபேசி எண்கள் மூலம் அவா்கள் தொடா்ந்து மருத்துவா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். நுரையீரல் பாதிக்கப்படுபவா்களை மருத்துவமனை வரவழைத்து, அவா்களுக்கு நுரையீரல் தொடா்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.