பட்டமேற்படிப்பு முடித்து, கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவா்கள் கூடுதல் படிப்பு படித்தால் வழங்கப்படும் ஊதிய உயா்வை ரத்து செய்து வெளியிட்ட அரசாணை, மருத்துவா்களுக்குப் பொருந்தாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல மாவட்டங்களில் ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. அந்த ஊதிய உயா்வை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சுகாதாரத் துறை செயலரிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா் என்றாா்.