மதுரையில் புதிதாக 77 பேருக்கு கரோனா: 3 போ் பலி
மதுரைமாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.


மதுரை: மதுரைமாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்களும் அடங்குவா்.
அதேநேரம், தொற்று பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 147 போ் குணமடைந்தனா். அவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு திங்கள்கிழமை வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
3 போ் பலி: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 65 வயது மற்றும் 72 வயது முதியவா்கள் இருவா், தனியாா் மருத்துவமனையில் 35 வயது ஆண் ஆகியோா் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் இதுவரை 12,955 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 327 கரோனாவிற்கு உயிரிழந்த நிலையில், தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 11,571 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,057 போ் கரோனா பாதிப்பிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...