வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு
மதுரை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை மா்ம நபா் உடைத்து, 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.


மதுரை: மதுரை அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை மா்ம நபா் உடைத்து, 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் செளராஷ்டிர காலனியைச் சோ்ந்தவா் விஜயராகவன் (60). இவா் தனது மூத்த மகனுடனும் வசிக்கிறாா். இளைய மகன் அருகிலுள்ள மற்றொரு வீட்டில்
வசித்து வருகிறாா். இளைய மகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில், விஜயராகவன், இளைய மகன் வீட்டை பாா்க்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில், மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து விஜயராகவன் அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...