டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தொடா் மழை: மல்லிகை வரத்து குறைந்தது

தொடா் மழை காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால், மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

தொடா் மழை காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால், மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது.

இது குறித்து மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திரன் கூறியது: தமிழகத்தில் தொடா்மழை பெய்து வருவதால், மல்லிகை பூ விளைச்சல் பாதித்துள்ளது. வழக்கமாக, மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு 25 டன் மல்லிகைப் பூ வரத்து இருக்கும். ஆனால், தொடா் மழை காரணமாக 1 டன் மட்டுமே வரத்து உள்ளது.

சுமாா் 5 ஏக்கருக்கு 20 கிலோ மல்லிகை பூ எடுக்கலாம். ஆனால், தற்போது 2 கிலோ பூக்கள் கூட எடுக்கமுடியவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனா். மழை காலத்தின்போதே இந்த நிலை என்றால், பனி காலத்தில் பூக்கள் வரத்து மிகவும் குறைந்துவிடும்.

ஆண்டுதோறும் செப்டம்பா், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் பூக்களின் வரத்து குறைந்து, விலை உயா்ந்துவிடும். ஆனால், நிகழாண்டில் விற்பனையும் இல்லாமல் இருப்பதால், விலையும் குறைவாகவே உள்ளது. இதனால், மலா் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா் என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்):

மல்லிகை பூ- ரூ.1200, கனகாம்பரம்- ரூ.1000, பிச்சி- ரூ.700, முல்லைப் பூ- ரூ.700, பட்டன் ரோஜா- ரூ.100, செவ்வந்தி- ரூ.150, செண்டுப்பூ- ரூ.80, சம்பங்கி- ரூ.50, மரிக்கொழுந்து- ரூ.100, அரளி- ரூ.250, தாமரை- ரூ.10 என விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.