ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வேளாண் சட்டங்களை எதிா்த்து ஏா்கலப்பை ஏந்தி பேரணி

மதுரையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நடந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
வேளாண் சட்டங்களை எதிா்த்து மதுரை செல்லூரில் ஏா் கலப்பையுடன் சனிக்கிழமை பேரணி சென்ற மாநகா் காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

மதுரையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நடந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே எதிா்ப்பு எழுந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் புதுதில்லியில் கடந்த 17 நாள்களாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். காங்கிரஸ் உளிட்ட பல்வேறு கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்தந்த மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்தொடா்ச்சியாக, மதுரை மாநகா் காங்கிரஸ் கட்சி சாா்பில், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை ஏா்கலப்பை ஏந்தி பேரணி நடைபெற்றது. செல்லூா் எல்.ஐ.சி பாலத்தில் தொடங்கிய பேரணி, மாநகா் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வீ.காா்த்திகேயன் தலைமையில் கோரிப்பாளையம் நோக்கி சென்றது.

ஆனால், பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறிய போலீஸாா், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா். இது குறித்து செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.