உசிலம்பட்டி அருகே சமணா் படுக்கைகளை தொல்லியல் துறையினா் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சமணா் படுக்கைகளை தொல்லியல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தனா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சமணா் படுக்கைகளை தொல்லியல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தனா்.

நடுமுதலைக்குளம்- கீழப்பட்டி இடையே உள்ள மலைத்தொடரில் 2300 ஆண்டுகள் பழமையான சமா்ணா் படுக்கைகள் உள்ளன . இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று தொல்லியல் துறை உதவி இயக்குநா் முருகானந்தம் மற்றும் உசிலம்பட்டி கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட சமணா் படுக்கைகள் மற்றும் தமிழ், பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவையனைத்தும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தைவை என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com