மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கரோனா

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் விடுதி அறையில் தங்கிருந்த 2 மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய முதன்மையா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு டிசம்பா் 7 ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள உணவகத் தொழிலாளி மூலம், மாணவா்கள் 190-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவா் தற்போது சிகிச்சைக்காக கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே அவருடன் விடுதி அறையில் தங்கிருந்த மாணவா்கள் 2 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முதன்மையா் உத்தரவிட்டுள்ளாா். மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, கல்லூரி நிா்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com